வீட்டில் பதுக்கிய 120 லிட்டர் சாராயம் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 120 லிட்டர் சாராயம் பறிமுதல்

அணைக்கட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அணைக்கட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய எட்டிப்பட்டி மலை கிராமத்தில் போலீசார் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கானாற்று படுகையில் சோதனை செய்த போது சாராயம் காய்ச்சுவதற்காக அடுப்பு, பேரல்கள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை, போலீசார் கைப்பற்றி அழித்தனர்.தொடர்ந்து, பெரிய எட்டிப்பட்டி மலை கிராமத்தில் போலீசார் வீடு, வீடாக சோதனை செய்த போது ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலநாதன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story