1,250 டன் ரேஷன் அரிசி காட்பாடிக்கு வருகை!

1,250 டன் ரேஷன் அரிசி காட்பாடிக்கு வருகை!

காட்பாடிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நேற்று காலை சரக்கு ரெயில் மூலம் வந்தது.


காட்பாடிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நேற்று காலை சரக்கு ரெயில் மூலம் வந்தது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை வினியோகிக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கும் வகையில் தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரேஷன் அரிசி பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 1,250 டன் ரேஷன் அரிசி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நேற்று காலை காட்பாடிக்கு சரக்கு ரெயில் மூலம் வந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிடங்கில் இருந்து லாரிகள் மூலம் தாலுகா வாரியாக உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ள பாமாயில், துவரம்பருப்பு ஆகியவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தலா 1,250 டன் ரேஷன் அரிசி தஞ்சாவூரில் இருந்த ரயில் மூலம் கடந்த வாரம் காட்பாடிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story