நாகையில் தனிப்படை வாகன சோதனையில் 1263 மதுபாட்டில் பறிமுதல்

நாகையில் தனிப்படை வாகன சோதனையில் 1263 மதுபாட்டில் பறிமுதல்

மதுபாட்டில் பறிமுதல்

நாகையில் தனிப்படை வாகன சோதனையில் 1263 மதுபாட்டில் பறிமுதல். ஓருவர் கைது. லாரி பறிமுதல்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்,உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று 14.04.2024 தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ECR பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட விழுந்தமாவடி கண்ணன் மகன் மணிவண்ணன்என்ற நபரை கைது செய்தும் அவர்களிடமிருந்து 90 ML அளவுள்ள 864 பாண்டி மது, 180 ml அளவுள்ள 384 மது பாட்டில்கள், 750 ml அளவுள்ள 15 மது பாட்டில்கள் என 1263 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மற்றும் கடத்துலுக்கு பயன் படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற வெளிமாநில மது, கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story