12ம் நூற்றாண்டு குமிழித்தூம்பு கண்டுபிடிப்பு

12ம் நூற்றாண்டு குமிழித்தூம்பு கண்டுபிடிப்பு

 குமிழித்தூம்பு

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை மலையன் கண்மாயில் 1200 ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு கண்டறியப்பட்டுள்ளது.

தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர் ராஜஷ் செல்வரதி கண்மாய் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது இரட்டை தூணுடன் சுமார் 12அடி உயர மண் கல்லால் வடிவமைக்கப்பட்ட குமிழித்தூம்பு இருப்பதை கண்டறிந்தார். கல்லின் தன்மை மற்றும் சிதைவுகளை ஆய்வு செய்த போது பொ.ஊ. 8 - 10ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதன் மையம் மற்றும் அடி பகுதியிலுள்ள இரு குறுக்கு தூண்கள் தென்படவில்லை என்றும் இது இந்த பகுதியான கீழ பட்டிணம்(வணிக நகர) நாகரீகத்தின் தொன்மைக்கும், நீர் மேலான்மைக்கும் சான்றாக விளங்குவதாகவும், இந்த துறைமுக நகரமான பட்டிணமருதூரில் 9 -10ம் நூற்றாண்டுகளில் மலட்டாறு என்ற ஆறு ஓடியதாக வரலாற்றில் பதிவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சமூகம் வேளாண்மை செய்வதற்கு ஏரி குளம் கண்மாய் போன்ற நீர்நிலைகளை உருவாக்கி அறிவியல் தொழில்நுட்பத்துடன் பயன்படுத்திய குமிழித்தூம்பு மூலம் பாசன செய்தது வியப்பாகத்தான் இருக்கிறது. குமிழித்தூம்பு : ஏரி, குளம்,கண்மாய் போன்ற நீர் நிலைகளுக்கு மழைநீர் வாய்க்கால் ஓடைகள் வழியாக நீர் வரும்போது நீரோடு களிம்பும் வண்டலும் சேர்ந்து வருவது நீர்நிலைகளில் தூர்ந்து போவதற்கு கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடும் "குமிழிகள்" ஏரிக்கரையில் மதகு போல் இருப்பதில்லை ஏரிக்கரையிலிருந்து சுமார் 200 முதல் 300 அடிகள் தள்ளி எரியின் உட்பகுதியில் இருக்கும். கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப் பொறுத்து குமிழிகள் எண்ணிக்கை கூடும். ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கல் தளம் அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டி அமைத்து, மேற்பத்தில் நீர் போவதற்கு பெரிய " நீரோடித்துளை" உருவாக்கி சுரங்க கால்வாய் மூலம் ஏரிக்கும், வெளியே இருக்கும்.

பாசனக்கால்வாய் இணைத்து துளையிட்டு இருக்கும் பாசனத்திற்கு நீர் தேவைக்கேற்ப குறைக்கவும் கூட்டவும் தூம்புக்கல்லை பயன்படுத்தினார்கள். தூம்புக்கல்லை மேலும் கீழும் இயக்குமாறு கற் சட்டம் அமையபெற்றிருக்கும்.கல் தொட்டியின் பக்கத்தில் மூன்று சிறு துளைகள் இடம் பெற்று இருக்கும் அவை சேரோடித்துளை என்பார்கள். பாசனத்திற்கு நீர் திறப்பதற்கு வலிமையானவர் நீந்தி சென்று தூம்பு கல்லை தூக்குவார்கள் .

இப்போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். கல் சட்டத்தில் உள்ள அழுத்தம் குறைவாக இருக்கும் இதனால் சேரோடி துளை வழியே வண்டல், களிம்பு நிறைந்த நீர் வேகமாக வெளியே ஏறும். நீரோடி துளை வழியாக 80 சதவீதம் நல்ல தண்ணீரும்,20 சதவீதம் மண் கூழ் தண்ணீர் வெளியேறும். நீரோருடன் சேர்ந்து மண் கூழ் வெளியேறுதால் சத்தான மண் பயிர்களுக்கு உரமாகவும், ஏரி பகுதியும் தூர் வழிந்து சுத்தமாக காணப்படும். மேலும் இதன் சுற்றுவட்டார பகுதிகளான கல்மேடு, பணியேனூர்(பனையூர்) போன்ற பகுதிளை கள ஆய்வுகளை மேற்கொண்டால் வரலாற்று தொன்மைகள் மற்றும் உண்மைகளை உலகறிய செய்யலாம் என்றும் தனது கருத்துக்களை வேண்டுதல்களாக பதிவு செய்தார்.

Tags

Next Story