12-ம் வகுப்பு மாணவி தற்கொலை- போலீசார் விசாரணை

12-ம் வகுப்பு மாணவி தற்கொலை- போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து கீழப்பழூவூர் போலீசார் விசாரணை நடத்தினர்

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சாருலதா. இவர் அக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையறிந்த கீழப்பழூவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் சாருலதா கண்ணீல் நீர் வருகிறது என்றும், காதில் வலி என்று கூறி வந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story