13 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

13 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் துவக்கி வைத்தார்
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னிமலை பாளையம், எஸ் கே கார்டன் மற்றும் அய்யாவுநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம் அந்த பகுதியில் சாலை அமைக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.இதனை அடுத்து 15 வது மானிய குழு திட்டத்தின் கீழ் 13 லட்சம் மதிப்பில் கான்க்ரீட் சாலை அமைக்க திட்டம் தயாரானது.சென்னிமலைபாளையம் எஸ்.கே.கார்டன் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story