ரூ.1.30 கோடி புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு

ரூ.1.30 கோடி  புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு

அடிக்கல் நாட்டு விழா 

பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் தாசநாயக்கன்பட்டி பொம்மாயம்மாள் நகரில் ரூ.12 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைத்து ரூ.8 லட்சம் செலவில் காங்கிரீட் சாலையில் அமைக்கப்படுகிறது. தாசநாயக்கன்பட்டி தனலட்சுமி நகரில் ராஜா வீடு முதல் மெயின் ரோடு வரை 6 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் மற்றும் ரூ.8 லட்சம் செலவில் காங்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது.

இதேபோல் தாசநாயக்கன்பட்டியில் ரூ.35 லட்சம் செலவில் குடிநீர் இணைப்புமும், காந்திபுரம் காலனி பகுதியில் உள்ள 80 வீடுகளுக்கு ரூ.5.92 லட்சம் மதிப்பில் குடிநீர் இணைப்புமும், அண்ணா காலனியில் ரூ‌.28 லட்சம் மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்குதல். தாசநாயக்கன்பட்டியில் ரூ.27.25 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டவும், மொத்தம் ரூ.1 கோடி 30 லட்சம் செலவில் பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது. மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் க.உமாசங்கர், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு கவுன்சிலர்கள் பிரியாமகேந்திரபிரபு, பூங்கொடி சிவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி செந்தில்குமார், குறிஞ்சி பாண்டியன், ராஜகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story