1318நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

1318 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் 1318 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா இஆப அவர்களின் தலைமையில் , வனத்துறை அமைச்சர் திரு.மா.மதிவேந்தன்அவர்கள், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் மாவட்ட திமுக மாவட்ட கழக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் 1318 இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்கள், இந்நிகழ்வில் வருவாய்துறை அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story