13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்

13.57  லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்

13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்

தாமனேரியில் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை.





ஆர்.கே.பேட்டை, ஆக.4:

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி தாமனேரி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.

ஆனால் அந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்ததால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23 நிதி ஆண்டில் ரூ 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது.

கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை திறந்து வைக்கப்படவில்லை. எனவே அங்கன்வாடி குழந்தைகளுக்காக உடனடியாக திறந்து வைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story