திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.61 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.61 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம் 

திருச்சி விமான நிலையத்தில் அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளின் பணம் ரூ.13 லட்சத்து 61 ஆயிரம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் செல்ல தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பயணிகளின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர்களது உடல்நிலை சோதனை செய்தபோது அமெரிக்க டாலர் மற்றும் துபாய் திராம்ஸ் என வெளிநாட்டு பணத்தை கடத்த வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர் . பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 13 லட்சத்து 61 ஆயிரம் ஆகும் தொடர்ந்து இரண்டு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story