சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 137 பேர் கைது - எஸ்பி ஜெயக்குமார்
![சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 137 பேர் கைது - எஸ்பி ஜெயக்குமார் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 137 பேர் கைது - எஸ்பி ஜெயக்குமார்](https://king24x7.com/h-upload/2023/12/05/319049-image3a37575.webp)
எஸ்.பி ஜெயக்குமார்
கடந்த ஒரு வாரத்தில் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 137 பேர் அதிரடி கைது
கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தனி படையினரால் நடத்தப்பட்ட தீவிர வேட்டையில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது 131 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 132 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தவர்கள் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அதில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக வைத்திருந்த ரூ. 26 ஆயிரத்து 500 மதிப்புள்ள 2 கிலோ 650 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story