138வது மே தின கொடியேற்று விழா

138வது மே தின கொடியேற்று விழா

மே தின கொடியேற்று விழா

குமாரபாளையம் நகர குழுவின் சார்பில் நேற்று 138வது மே தின கொடியேற்று விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர குழுவின் சார்பில் நேற்று 138வது மே தின கொடியேற்று விழா நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமாரபாளையம் நகர குழுவின் சார்பில் நேற்று 138வது மே தின கொடியேற்று விழா குமாரபாளையம் நகரம் மற்றும் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய குழு சார்பில் நடந்தது. நகர செயலர் கணேஷ் குமார் தலைமை வகித்தார். கட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட், நகராட்சி அலுவலகம், காளியம்மன் கோவில், கலைமகள் வீதி உள்ளிட்ட 22 இடங்களில் கொடியேற்றுவிழா நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஈஸ்வரன், அசோகன், கேசவன், அம்சவேணி, பழனியப்பன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story