கலசபாக்கம் அருகே 14 ஆடுகள் திருட்டு

கலசபாக்கம் அருகே 14 ஆடுகள் திருட்டு

பைல் படம் 

கலசபாக்கம் அருகே நள்ளிரவில் கொட்டகையில் இருந்த 14 ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கமலா புத்தூர் கிராமம் பழைய காலனியை சேர்ந்தவர் பார்த்தசாரதி ( 65). இவர் சம்பவத்தன்று கொட்டகையில் ஆடுகளை கட்டிவிட்டு வேறு கொட்டகைக்கு சென்று தூங்கினார். அதிகாலை எழுந்து சென்ற போது கொட்டகையில் கட்டியிருந்த 14 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து கலசபாக்கம் காவல் நிலையத்தில் பார்த்த சாரதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story