14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா

வேலப்பாடி சிவசக்தி நகரிலுள்ள அருள்தரும் ஆஞ்சநேயர் கோவிலில், 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது.

ஆரணி சட்டமன்ற தொகுதி, வேலப்பாடி ஊராட்சி,சிவசக்தி நகர் அருள்தரும் ஆஞ்சநேயர் 14 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு சிவசக்தி நகர் முன்னாள் வார்டு உறுப்பினர், கிளை கழக செயலாளர் திருமதி S.ரேவதி சங்கர் அவர்களின் நிகழ்ச்சி ஏற்பாட்டில், முன்னாள் அமைச்சர், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர், அண்ணன் திருமிகு சேவூர் S இராமச்சந்திரன் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

நிகழ்வில்,மாவட்ட கழக பொருளாளர் அரையாளம் M.வேலு, ஆரணி நகர கழக செயலாளர் A.அசோக்குமார் ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் E.ஜெயப்பிரகாஷ் கண்ணமங்கலம் கழக செயலாளர், M.பாண்டியன் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் இணை செயலாளர்,AGR.மோகன் வேலூர் மண்டல பொருளாளர் SP.சரவணன் சிவசக்தி நகர் கிளை கழக செயலாளர் S.சங்கர் கிளை கழக நிர்வாகிகள் ராமமூரத்தி, பழனி, சரவணன்,கதிரவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story