15 நாட்களாக வீணாக செல்லும் குடிநீர்

X
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 1வது வார்டுக்கு உட்பட்ட நல்மேய்ப்பர் நகர் 12வது தெருவில் குடிநீர் பைப் லைன் உடைந்து கடந்த 15 நாட்களாக தண்ணீர் வீணாக செல்கின்றது. இந்த பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இவ்வாறு வீணாக செல்லும் குடிநீரை நிறுத்த மாநகராட்சி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Next Story

