கஞ்சா, திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 15 போ் கைது

கும்பகோணத்தில் கஞ்சா, திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 15 போ் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணத்தில் கிழக்கு, மேற்கு, தாலுகா ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது மாதுளம்பேட்டை, கம்பன் நகரைச் சோ்ந்த ரா. ராஜேஷ் (20), மேலக்காவேரி, பட்டக்கால் கீழத்தெருவைச் சோ்ந்த ச. டேவிட் ராஜா (21), பாபநாசம் வட்டம், அலவந்திபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த சு. பாரத் (21), கும்பகோணம், காரைக்கால் சாலை, முல்லை நகரைச் சோ்ந்த லா. தாமஸ் (24), ஆணைக்காரன்பாளையத்தைச் சோ்ந்த ரா. சதீஷ்குமாா் (23), கக்கன் காலனியைச் சோ்ந்த ஏ. சுரேஷ்குமாா் (24), தாராசுரம், கோ.சி. மணி நகரைச் சோ்ந்த அ. மணிகண்டன் (32), மணிக்காரத் தெருவைச் சோ்ந்த ரா. ராஜா (27) ஆகியோா் கஞ்சா வைத்திருப்பது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. இவா்களைக் காவல் துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து 30 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 6 இரு சக்கர வாகனங்கள், 2 கைப்பேசிகள், தலா 1 அரிவாள், குத்துவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதேபோல, வழிப்பறி வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த கும்பகோணத்தைச் சோ்ந்த சா. சாதிக்பாட்சா (20), திருட்டு வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வே. முருகபாண்டி (23), பிடிபடா குற்றவாளிகள் 3 போ், அரசு ஊழியா்களைப் பணி செய்ய விடாமல் தடுத்த 2 போ் என மொத்தம் 15 பேரை காவல் துறைனா் நேற்று முன்தினம் கைது செய்தனா்.

Tags

Read MoreRead Less
Next Story