4 தென் மாவட்டங்களில் 1.5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் சேதம்

4 தென் மாவட்டங்களில் 1.5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் சேதம்

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

நெல்லை,தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 1.5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் மழையால் சேதமடைந்ததாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையால் பாதித்த பகுதிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் மழை வெள்ளத்தால் தென் மாவட்டங்களான நெல்லை,தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 1.5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story