தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து. பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து. பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம். கந்தர்வக்கோட்டை அருகே புதுநகரில் தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளிக்கு நாள்தோறும் மாணவர்கள் வேனில் சென்று வருகின்றனர். இன்று காலை மோளுடையான்பட்டி கருப்பட்டிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாணவர்களை ஏற்றுக்கொண்டு சென்ற பள்ளிவேன் தொண்டைமான்ஊரணி அருகே உள்ள சாலையில் செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வையாபுரி குளத்தில் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக குளத்துக்கரையில் கட்டப்பட்டிருந்த குமிழிக்கட்டையில் மோதி சாய்ந்து நின்றது . வேனில் முப்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். இந்த விபத்தில் 15க்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். மாணவர்களை பெற்றோர்கள் மழையூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆதனக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story