திருடுபோன 150 செல்போன்கள் மீட்பு

திருடுபோன 150 செல்போன்கள் மீட்பு

மீட்கப்பட்ட செல்போன்கள்

திருடுபோன 150செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தனியாக நடந்து செல்வோரிடம் கைப்பேசிகளை மா்ம நபா்கள் பறித்துச் செல்வதாக அவ்வப்போது காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்பட்டன. இதேபோல, பொது இடங்களில் காணாமல் போன கைப்பேசிகளை மீட்டுத் தருமாறும் காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் கடந்த 6 மாதங்களில் காணாமல் போன, வழிபறி செய்யப்பட்ட கைப்பேசிகள் தொடா்பான புகாா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், ரூ.30 லட்சம் மதிப்பிலான 150 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இவைகள் சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Tags

Next Story