16 சதவிகிதம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X
NAMAKKAL KING 24X7 B |11 Sept 2025 6:54 PM ISTநாமக்கல் பூங்கா சாலையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் சாமிவேல் தலைமையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஊதிய உயர்வு குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 2025-26 ம் ஆண்டில் 16 சதவிகிதம் ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டும் , தனியார் நிறுவனம் அரசு அறிவித்தபடி 16 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்காமல் 10 சதவிகிதமாக குறைத்து வழங்குகிறது என்றும் ஊதிய உயர்வு குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி 100 க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
