அரூர் அருகே 16 வயது சிறுமி கர்ப்பம்: சிறுவன் மீது போக்சோவில் கைது

அரூர் அருகே 16 வயது சிறுமி கர்ப்பம்:   சிறுவன் மீது போக்சோவில் கைது

கோப்பு படம் 

அரூர் அருகே 16 வயது சிறுமி கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரப்பூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் மீது மகளிர் போலீசார்.போக்சோ வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும், 17 வயது சிறுவனும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி,சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 3-ம்தேதி கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயிலில், அந்த சிறுமியை சிறுவன் திருமணம் செய்து கொண்டு, கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கர்ப்பமடைந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சிறுமி அளித்த புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story