16 வயது சிறுமி கர்ப்பம் காதல் கணவன் மீது போக்சோ வழக்கு

16 வயது சிறுமி கர்ப்பம் காதல் கணவன் மீது போக்சோ வழக்கு
சிறுமி கர்பம்
16 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கொண்டு கர்பமாக்கிய வாலிபர் மீது காவல்துறையினர் போக்சோ வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சேலம் டவுனில் 16 வயது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது காதல் கணவன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். சேலம் குகை மூங்கப்பாடி ஆற்றோர கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது அவரது வயது விவரத்தை அறிந்து, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழும அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 6 மாதத்திற்கு முன் அச்சிறுமி குகை மூங்கப்பாடி பகுதியை சேர்ந்த கோபால் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். முன்னதாகவே அவர் கர்ப்பமான நிலையில் தான், திருமணத்தை நடத்தியுள்ளனர் எனத்தெரியவந்தது. இதையடுத்து 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கோபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story