17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய கணவர் மீது வழக்கு

X
விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் மீனவர் தெருவை சேர்ந்தவர் பாவாடை மகன் மூர்த்தி (25) இவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துள்ளார். மேலும் சிறுமியை கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட்டதில் தற்போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை திருமணம் செய்த மூர்த்தி, மற்றும் அவரது தந்தை பாவாடை, அவரது தாய் செல்லம்மா, மற்றும் கருப்பையா, மணிமேகலை ஆகிய ஐந்து பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

