மழைக்கு 17 ஆடுகள் உயிரிழப்பு!

மழைக்கு 17 ஆடுகள் உயிரிழப்பு!

பைல் படம் 

பொன்னமராவதி அருகே ஆலம்பட்டியில் மழை காரணமாக விவசாயி ஒருவரின் 17 ஆடுகள் உயிரிழந்தன.
பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி. இவர் கோவனூரில் உள்ள நிலத்தில் செம்மறி ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்த பகுதியில் கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை தினமும் மாலை நேரங்களில் மழை பெய்தது. மழையில் நனைந்ததில் 17 ஆடுகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தன. தகவலறிந்ததும் கால்நடைத்துறையினர் வந்து உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

Tags

Next Story