திருப்பத்தூர் : 17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு

திருப்பத்தூர் : 17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 17 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 17 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு துறை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்ட மக்களுக்கு 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் கொடியசைத்து அனுப்பி வைத்தார் . அப்போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது செல்வம், மாவட்ட கூட்டுறவு துறை இணை இயக்குநர் முருகேசன் , மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பூங்கொடி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்..

Tags

Next Story