17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் 5 இளைஞர்கள் கைது

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் 5 இளைஞர்கள் கைது
போக்சோ சட்டம்
பாபநாசத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், அதை வீடியோ எடுத்து பகிர்ந்தவர்கள் உட்பட 5 இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
பாபநாசத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், அதை வீடியோ எடுத்து பகிர்ந்தவர்கள் உட்பட 5 இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். பாபநாசம் அருகே நாகலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் அபினேஷ்(21). ஒன்பத்துவேலி மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(21). திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் மாளிகைத் திடல் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன்(21). மாளிகைத்திடல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(24). பூண்டி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ராகுல் என்ற குட்டி (24). இவர்கள் 5 பேரும் நண்பர்கள். இந்நிலையில், டிச.19-ஆம் தேதி அபினேஷுக்கு பழக்கமான 17 வயது சிறுமிக்கு, ஸ்ரீகாந்த் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதற்கு அபினேஷ் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் பாலியல் தொல்லை அளித்ததை அரவிந்தன் செல்போனில் வீடியோ எடுத்து, ராகுல் என்ற குட்டிக்கு அனுப்பி யதாகவும், அந்த வீடியோவை ராகுல் பலருக்கு பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் உதவி மைய எண் 1098-க்கு புகார் வந்ததையடுத்து, உதவி மைய அதிகாரிகள் அந்தச் சிறுமியிடம் ஸ்ரீதரன்,விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி அளித்த புகாரின்பேரில், பாபநாசம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீதரன், ஸ்ரீகாந்த், அபினேஷ், அரவிந்தன், ராகுல் என்ற குட்டி ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story