திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.35 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.35  லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.17.35 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் உடலில் மறைத்து வைத்த ரூபாய் 17 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பான 277.6 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதை தொடர்ந்து அதிகாரிகள் அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்

Tags

Next Story