179 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

179 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
வழங்கல்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் , மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் கமலசேகரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் உஷாநந்தினி, கண் மருத்துவர் காயத்திரி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். 179 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Next Story