எஸ்எஸ்வி மேல்நிலைப் பள்ளியில் 17வது ஆண்டு விழா

எஸ்எஸ்வி மேல்நிலைப் பள்ளியில் 17வது ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

எஸ்எஸ்வி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 17வது ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி,. மேல்நிலைப் பள்ளியில் 17வது ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டி மற்றும் இலக்கிய மன்ற விழா என முப்பெரும் விழா நடந்தது.பள்ளி முதல்வர் ஹெலன்பாத்திமாராணி தலைமை தாங்கினார். தாளாளர் விஜயா வரவேற்றார். விழாவில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், யோகாசனம், கோலாட்டம், சிலம்பம், கராத்தே மற்றும் மல்லர் கம்பம் நிகழ்ச்சிகள் நடந்தது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். அறக்கட்டளைத் தலைவர் இந்திரா, பொருளாளர் சாந்தி, இணை செயலாளர் தமிழரசி, அறக்கட்டளை உறுப்பினர்கள் அருள்மோகன், சாந்தி, அன்புமணி, மஞ்சுளா, தக் ஷிணாமூர்த்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி போக்குவரத்து இயக்குனர் மனோகரன் நன்றி கூறினார்.

Tags

Next Story