18 வயது நிரம்பாதவர்கள் மோட்டார் சைக்கிள் கூட்டினால் உரிமையாளர் மீது நடவடிக்கை

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி ஜமாத் சமுதாய கூடத்தில், போக்குவரத்து சம்மந்தமான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், திட்டச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன், நாகை டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அண்மையில் திட்டச்சேரி மற்றும் நாகை அக்கரைப்பேட்டையில் நடைபெற்ற விபத்தில், 4 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இறந்தனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து, இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், 18 வயது நிரம்பாதவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டக் கூடாது. ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், திட்டச்சேரி, ப.கொந்தகை, கட்டுமாவடி, புறாகிராமம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் நாட்டாமை பஞ்சாயத்தார்கள்,பொதுமக்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
Next Story

