புதுக்கோட்டையில் 18,258 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்

புதுக்கோட்டையில் 18,258 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள்

புதுக்கோட்டையில் 18,258 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வினை 18,258 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.

மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனா, பென்சில் இனிப்பு மற்றும் அறிவுரை வழங்கிய திமுக நிர்வாகி... பிளஸ் டூ பொதுத்தேர்வு அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 737 மாணவர்களும், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் நான்காயிரத்து அறநூத்தி மூன்று மாணவர்களும், 5,670 மாணவிகளும் என மொத்தம் 18,258 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்த தேர்வு மொத்தம் 98 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வினை சிறப்பாக நடத்த அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசி வழங்கி தேர்வுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட வடக்கு மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் முத்துக்கருப்பன்,

முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பேனா, பெஞ்சில் மற்றும் இனிப்பு வழங்கினார்... தேர்வு எழுதும் மாணவிகள் பதற்றம் இன்றி தேர்வு எழுதவும், அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்கவும் அறிவுரை வழங்கினார்...

Tags

Next Story