18ஆம் ஆண்டு நாயன்மார்கள் குருபூஜை விழா

எடப்பாடியில் 18ஆம் ஆண்டு நாயன்மார்கள் குருபூஜை விழா மற்றும் 2ம்ஆண்டு திருவீதி உலா
எடப்பாடியில் அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் 18ஆம் ஆண்டு நாயன்மார்கள் குருபூஜை விழா மற்றும் இரண்டாம் ஆண்டு பன்னிரு திருமுறை திருவீதி உலா கைலாய வாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் தங்களுடைய தலை மீது திருமுறை நூல்களை சுமந்து சென்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் அருள்மிகு பிரசன்ன நஞ்சனேஸ்வரர் திருக்கோயிலில் பதினெட்டாம் ஆண்டு நாயன்மார்கள் குருபூஜை மற்றும் இரண்டாம் ஆண்டு பன்னிரு திருமுறை திருவிதி விழா விமர்சியாக நடைபெற்றது.... கோயிலில் தொடங்கிய திருவீதி உலா சிவனடியார்கள் கைலாய வாத்தியங்கள் முழங்க சிறுவர் சிறுமிகள் சிலம்பம் சுழற்றிக் கொண்டும் கடைவீதி,பவானி செல்லும் சாலை, மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா விமர்சியாக நடைபெற்றது. அப்போது சிவனடியார்கள் தலை மீது திருமுறை நூல்களை சுமந்து கொண்டும் திருவீதி விழாவில் பங்கேற்றனர்.

Tags

Next Story