2வது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்

2வது நாளாக  வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 2வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 2வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய ஜாஜி சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை சமஸ்கிருத்தம் நுழைத்து திருத்தி உள்ளனர். இதன் ஷரத்துகள் மக்கள் விரோதமாக இருப்பதால், இதனை திரும்ப பெறக்கோரி, குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று 2வது நாளாக நடத்தினர். இதில் சங்க செயலர் நடராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் துணை தலைவர் தீனதயாளன், இதே அமைப்பின் துணை செயலர் ஐயப்பன், குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க பொருளர் நாகப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story