2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை

2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை
X
பத்மநாபபுரம்
குமரி மாவட்டம்  குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சன் (44) தொழிலாளி. இவர் கடந்த 21-1 -2010 இரவில் ராஜீவ்  என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில்  சென்றனர். அப்போது மன்னாரங்கோடு காலனியில் ஒரு இறப்பு வீட்டிற்கு வந்த உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்த தொழிலாளிகளான வினோ என்ற தமிழரசன், விமல் காந்த், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த ஜெய்சன்  சண்டையை விலக்கி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் கத்தியால் ஜெய்சன், ராஜீவ் ஆகியோரை குத்தினர்.        இந்த வழக்கு  பத்மநாபபுரம்  சப் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி மாரியப்பன் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்ற சுமத்தப்பட்ட மூன்று பேரில்  ரமேஷ் இறந்து விட்டதால் தமிழரசன், விமல்காந் ஆகிய இரண்டு பேருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவில் தண்டனையும், தலா  5 ஆயிரம் அபராதம் வழங்கி தீர்ப்பு கூறினார்
Next Story