கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது !

கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது !

கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே கடந்த ஆண்டு மார்ச் மாதம் பஸ் மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய 2 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வந்து, பின்னர் இங்கிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் கஞ்சா கடத்தல் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சையத் அலி (வயது 23), ஸ்ரீஜித் (28) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே ஓராண்டுக்கு பிறகு தலைமறைவாக இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story