சேலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

சேலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

பைல் படம் 

சேலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி முயல் நகரை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் ஜட்ஜ் ரோட்டை அடுத்த ராமநாதபுரம் கோவில் பண்டிகையை பார்க்க சென்றார். அப்போது சின்னத்திருப்பதி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது25), மணிகண்டன் (25) ஆகியோர் ரஞ்சித்தை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்


Tags

Next Story