வைக்கோலுக்கு தீ வைத்த 2 போ் கைது

திருவிடைமருதூர் அருகே மெய் குன்னம் ஊராட்சியில் வைக்கோலுக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வைக்கோலுக்கு தீ வைத்த 2 போ் கைது கும்பகோணம் அருகே வைக்கோலுக்கு தீ வைத்ததாக 2 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்குள்பட்ட நெய்குன்னம் கிராமத்தைச் சோ்ந்த அருண் வீட்டின் பின்புறம் இருந்த வைக்கோல் கட்டுகள் பிப்ரவரி 20 ஆம் தேதி தீப்பற்றி எரிந்தன.

இதன் அருகிலுள்ள சுவரில் கீழே தொடரும் எனவும் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதனிடையே, திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஒய். ஜாபா் சித்திக் அப்பகுதியைச் சோ்ந்த 15-க்கும் அதிகமான இளைஞா்களைப் பந்தநல்லூா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, தொடரும் என்ற சொல்லை எழுதிக் காண்பிக்குமாறு கூறினாா்.

இதில், நெய்குன்னம் முதன்மைச் சாலையைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் ஜெயபிரகாஷ் (23) மற்றும் இவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் பிரகாஷ் (26) ஆகியோரின் கையெழுத்துகள் ஒத்துப்போயின. இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக அருண் வீட்டு வைக்கோல் கட்டுகளில் தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Tags

Next Story