கள்ள சாராயம் கடத்திய 2 பேர் கைது- 220 லிட்டர் பறிமுதல்

கள்ள சாராயம் கடத்திய 2 பேர் கைது-  220 லிட்டர் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகள் 

நாகூர் அருகே முட்டம் சாலையில் நடந்த வாகன தணிக்கையின் போது சாராய கடத்தி வந்த 2 பேரை கைது செய்து 220 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட் டம் நாகூர் அடுத்த முட் டம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி 2 பைக்குகளில் சந்தேகப்படுமாறு வந்த 2 பேரை பிடித்து நாகூர் போலீசார் விசாரித்தனர். இதில் பைக்குகளில் சாராய பாக்கெட்டுகளை மூட்டையாக கட்டி கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் நாகை அடுத்த பெருங்க டம்பனூரை சேர்ந்த முருகநாதன் (20), விஜய் (23) என்பதும், நாகூர் பகுதியில் விற்பனை செய்வதற்காக காரைக்காலில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து 220 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story