ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது!

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது!

திருவண்ணாமலையில் சரக்கு வேனில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருவண்ணாமலையில் சரக்கு வேனில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அரடாப்பட்டு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 700 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு பேரை கைது செய்தனர்.

Tags

Next Story