ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் வழிப்பறி - சிறுவன் உட்பட 2 பேர் கைது

ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் வழிப்பறி - சிறுவன் உட்பட 2 பேர் கைது

அமர்நாத் 

ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் செல்போன், பணம் பறித்த வழக்கில் சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், விஜயபுரம் மண்டலம், இல்லத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கல்ராஜு (வயது 70). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் கடந்த வியாழக்கிழமை திருத்தணியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று, பின்னர் இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சந்தானகோபாலபுரம் பஸ் நிலையம் அருகே செங்கல்ராஜு சென்றபோது, அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் செங்கல்ராஜுவிடம் இருந்து செல்போன், 5 ஆயிரம் பணத்தை பறித்தனர். தடுக்க முயன்ற அவரை அந்த கும்பல் கட்டையால் தாக்கி விட்டு தப்பினர். இதுகுறித்து கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று வழிப்பறி கொள்ளை வழக்கில் தாழவேடு கிராமத்தைச் சேர்ந்த அமர்நாத் (வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் பணம், 2 செல் போன்கள் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story