பள்ளி மேலாண்மை குழுவினருக்கு 2 நாள் பயிற்சி முகாம்

பள்ளி மேலாண்மை குழுவினருக்கு 2 நாள் பயிற்சி முகாம்

பயிற்சி முகாம் 

சங்கராபுரத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் உள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா தலைமை தாங்கி துவக்கிவைத்தார். வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட திட்ட அலுவலர் நெடுஞ்செழியன், ஒருங்கிணைப்பாளர்கள் ஞானவேல்,வண்ணத்தமிழன் மற்றும் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story