‘திருச்சி கோட்டத்தில் 2 குட்ஷெட்டுகள் நாளை திறப்பு’

‘திருச்சி கோட்டத்தில் 2 குட்ஷெட்டுகள் நாளை திறப்பு’

85 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டப் பணிகளை வருகின்ற மார்ச் 12ஆம் தேதி நாட்டிற்கு பிரதமர் மோடி அர்பணிகிறார் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் கூறினார்.


85 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டப் பணிகளை வருகின்ற மார்ச் 12ஆம் தேதி நாட்டிற்கு பிரதமர் மோடி அர்பணிகிறார் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் கூறினார்.
இரயில்வே துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை வருகின்ற 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டிற்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். 85 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்ட பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும், இதில் 44 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 60 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு ஸ்டால்களையும் காணொளி வாயிலாக அர்ப்பணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் தயாரிப்பு பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் என்றார். மேலும் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி மற்றும் பட்டுக்கோட்டையில் முறையில் தலா 7கோடி மற்றும் 6.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குட்செட் யார்டுகளை நாட்டிற்கு அர்பணிக்க உள்ளார்.மேலும் திருச்சி ரயில்வே சந்திப்பில் மருந்தகம் ஒன்றிணையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் என்றார்.

Tags

Next Story