கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த 2 காதல் ஜோடி

கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில்  தஞ்சமடைந்த 2 காதல் ஜோடி
பைல் படம்
கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தராஜ் காலனியை சேர்ந்தவர் பரத் (வயது24). எலக்ட்ரீசியன். கோமப்பட்டியைச் சேர்ந்தவர் ஹரிணி (19). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு கன்னங்குறிச்சி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

இதேபோல் கொண்டப்பநாயக்கன்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகன் (23). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சவுமியா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் காதல்ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு கன்னங்குறிச்சி போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி ஆகியோர் காதல் ஜோடிகளின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காதல் ஜோடிகளை பெற்றோர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story