திருட்டு வழக்கில் 2மாத சிறைதண்டனை: ஆத்தூர் நீதிமன்றம் உத்தரவு

திருட்டு வழக்கில் 2மாத சிறைதண்டனை: ஆத்தூர் நீதிமன்றம் உத்தரவு

சிறை தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர்

ஆத்தூர் அருகே வினாயகபுரத்தில் வீட்டில் புகுந்து, பணம், நகை திருடிய வழக்கில்,வாலிபருக்கு, இரண்டு மாதம் சிறை தண்டனை விதித்து ஆத்தூர் நீதிமன்றம் உத்தரவு

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (31). துணி வியாபாரியான இவரது வீட்டில், கடந்த, மே மாதம் வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வீட்டில் புகுந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் திருடிச் சென்றனர்.

விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூரை சேர்ந்த, வெங்கடேசன் மகன் ஹரிஹரன் ( 25 ), என்பது தெரியவந்தது. அவரை, ஆத்தூர் நகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஆத்துார் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்,

விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முனுசாமி, பணம், நகை திருடிய ஹரிஹரனுக்கு, இரண்டு மாதம் சிறைதண்டனை மற்றும் 600 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags

Next Story