செம்மண் திருடிய 2 பேர் கைது: 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்!

செம்மண் திருடிய 2 பேர் கைது: 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்!

 கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே சட்டவிரோதமாக லாரியில் செம்மண் திருடிய 2 பேர் கைது செயப்பட்டனர். திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாப பிள்ளை தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் நேற்று பேட்மாநகரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் செய்துங்கநல்லூர் கீழநட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் மகன் சுரேஷ் (35) மற்றும் முறப்பநாடு வடக்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சண்முகசுந்தரம் (21) ஆகிய இருவரும் மேற்படி டிப்பர் லாரிகளில் சட்டவிரோதமாக எவ்வித அனுமதியுமின்றி செம்மண் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அந்தோணிராஜ் வழக்குபதிவு செய்து சுரேஷ் மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து, 3 யூனிட் செம்மண் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story