சுங்க கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் 2 பேர் கைது

சுங்க கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் 2 பேர் கைது

சுங்கச்சாவடி

நத்தம் அருகே பரளிபுதூர் சுங்கச்சாவடியில் புதன்கிழமை இரவு சுங்க கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் சுங்கச்சாவடியை அடித்து உடைத்த 7 பேர் கொண்ட கும்பலில் 2 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள பரளிபுதூர் பகுதியில் மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதனிடையே புதன்கிழமை இரவு வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (27) என்பவர் தனது கழிவுநீர் வாகனத்தை எடுத்து கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கவரி கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் நான் உள்ளூர்காரன் என்னிடம் கட்டணம் கேட்கிறாயா? என லோகேஷ்க்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமரா, தடுப்புகள், பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கினர். சுங்கச்சாவடியை அடித்து உடைத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

Tags

Next Story