ஆன்லைன் லாட்டரி வழக்கில் கைதான 2 பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

ஆன்லைன் லாட்டரி வழக்கில் கைதான 2 பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

நீதிமன்றம் 

ஆன்லைன் லாட்டரி வழக்கில் கைதான 2 பேரை காவலில் எடுத்து போலீஸ் 2நாட்கள் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி
சேலம் நெத்திமேடு கே.பி.கரடு பகுதியில், வாட்ஸ் அப் மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த, நாமகிரிப்பேட்டை பச்சுடையான்பாளையத்தை சேர்ந்த சிவகுமார் (40), சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (37) ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி யுவராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story