இரும்புக் கம்பியால் தாக்கிய ரவுடி உட்பட 2பேர்கள் கைது!

இரும்புக் கம்பியால் தாக்கிய ரவுடி உட்பட 2பேர்கள் கைது!

தூத்துக்குடியில் வழிமறித்து தகராறு செய்து இரும்புக் கம்பியால் தாக்கிய ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் வழிமறித்து தகராறு செய்து இரும்புக் கம்பியால் தாக்கிய ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி பூபல்ராயர்புரம் பகுதியை சார்ந்த அந்தோணிசாமி மகன் சார்லஸ் (40) என்பவர் கடந்த 02.12.2023 அன்று திரேஸ்புரம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர்களான பெருமாள் (எ) குட்டையன் பெருமாள் மகன் சுரேஷ்குமார் (எ) ஜெமினி (27) மற்றும் செந்தூர்பாண்டி மகன் தங்கராஜ் (20) ஆகியோர், சார்லஸை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சார்லஸ் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் வழக்குபதிவு செய்து சுரேஷ்குமார் (எ) ஜெமினி மற்றும் தங்கராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் (எ) ஜெமினி மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10 வழக்குகளும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் என 13 வழக்குகள் உள்ளது. மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story