சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கணவரிடம் இருந்து குழந்தைகளை மீட்டு தரக் கோரிக்கை விடுத்தார்.
சேலம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மனைவி ஜெபா (வயது 25) இவரது தாய் மரியா (50). இவர்கள் 2 பேரும் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது திடீரென பையில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஜெபா கூறியதாவது:- எனக்கும், ராமு என்பவருக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார் . ஆனால் திருமணம் முடிந்ததில் இருந்து குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை. குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 18-ந் தேதி அவர் குடித்துவிட்டு என்னிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்று விட்டார். அவர்களை மீட்டு தர வேண்டும் என்று கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எனது குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி தீக்குளிக்க முயற்சி செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story