கொலை வழக்கில் தேடப்பட்ட 2பேர் நீதிமன்றத்தில் சரண்

கொலை வழக்கில் தேடப்பட்ட 2பேர் நீதிமன்றத்தில் சரண்

கைது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சகோதரர்கள் 2பேர் நேற்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ராஜீவ் நகரை சேர்ந்த மாசிலாமணி மகன் முனியசாமி (45). உப்பள தொழிலாளி. இவருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த பெண்ணிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை, அந்த பெண்ணின் மகன்களான சுதாகர், சதீஷ் ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால் முனியசாமிக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சாமிநகர் பகுதியில் சைக்கிளில் சென்ற முனியசாமியை சுதாகர், சதீஷ் ஆகியோர் ௳ழிமறித்து தகராறு செய்து, வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனராம். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுதாகர், சதீஷ் ஆகியோரை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் அந்த 2 பேரும் நேற்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story